ரஜினிகாந்த் குறித்து யாரும் எதிர்பார்க்காத கருத்தை தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்..! குழப்பத்தில் தொண்டர்கள்..!  - Seithipunal
Seithipunal


டிகர் ரஜினி 'துக்ளக்' விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.

அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய 'துக்ளக்' பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Image result for rajini seithipunal

பின்னர், போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  நான் உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாததை ஒன்றும் நான் சொல்லவில்லை. 1971 ம் ஆண்டு ராமர் சீதை சிலை உடையில்லாமல் கொண்டுவரப்பட்டது உண்மை தான் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர்,  இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை, மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்திருந்தார். 

இதை தொடர்ந்து, ரஜினிகாந்த பேசியது குறித்து அனைவரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திராவிட இயக்கங்கள் ரஜினிகாந்தை எதிர்த்து அவர் வீட்டுமுன் கோஷங்கள் முழங்கியது. ஆனால், ரஜினிக்கு ஆதரவாகவும் சில பேர் களத்தில் இறங்கி பேசினார்கள். 

இந்த நிலையில், நேற்று தை அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூரில் இருக்கும் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் தேமுதிக தலைவர்  விஜயகாந்தின் உடல் நலம் குணமாக அவரது மனைவி பிரமேலதா விஜயகாந்த சுவாமி தரிசனம் செய்து வந்தார். 

Image result for premalatha seithipunal

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா,  “துக்ளக் விழாவின் பொது பெரியார் குறித்து பேசியதை ரஜினிகாந்த் தவிர்த்திருக்கலாம்.  பெரியார் யார் என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகமே அறிந்த ஒன்று தான். அவர் சரித்திரமாய் இருந்து சகாப்தம் படைத்தவர். நாம் என்ன செய்யப் போகிறோம் என இன்றைய அரசியல் சூழலில் இருப்பதைப் பற்றி தான் பேசவேண்டும். 

மேலும், பெரியார் பெண்ணுரிமைக்காக கடுமையாக போராடியவர், அவரை பற்றி துக்ளக் விழாவில் பேசியது தவறு. துக்ளக் இதழ் பற்றி ரஜினிகாந்த் பேசி இருந்திருக்கலாம். ரஜினிகாந்த் இதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் வெறும் அம்பு தான் என்றும் யாரோ அவரை பின்னணியிலிருந்து இயக்குகின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். 

விஜயகாந்தும், ரஜினியும் நல்ல நண்பர்களாக இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே, எனவே பிரேமலதா இவ்வாறான கருத்தை தெரிவித்தது சற்று குழப்பமாக தான் இருக்கிறது. யாரை, ரஜினிக்கு பின்னணியிலிருந்து இயக்குகின்றனர் என்று அவர் கூறினார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha about rajinikanth


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->