10 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஆல்பர்ட் 'வளவன்' தலைமறைவு.!
police searc albert valavan
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிகள் 13 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராம்ராஜ், ஆல்பர்ட்வளவன் ஆகிய 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவதும், அவர்களை தொடுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதுமாக இந்த இரண்டு ஆசிரியர்களும் இருந்து வந்துள்ளது மாணவிகளின் புகாரில் வெளிவந்தது.
பதிமூன்று பள்ளி மாணவிகள் புகார் அளித்ததன் பேரில், 2 ஆசிரியர்கள் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில், ராமராஜ் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றும் ஒரு ஆசிரியரான ஆல்பர்ட் வளவன் என்பவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
(புகைப்படத்தில் இருப்பவன் ஆல்பர்ட் வளவன்)
English Summary
police searc albert valavan