#சென்னை | மதுபோதையில் 4 பேர் மீது காரைவிட்டு ஏற்றிய பாஜக பிரமுகருக்கு தர்மஅடி!
police case file against BJP Narasimman
சென்னை அருகே மது போதையில் வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திய பாஜக முன்னாள் மாநில நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் பாஜகவில் முன்னாள் தொழில்துறை மாநில செயலாளராக பதவி வைத்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த நேற்று இரவு எட்டு மணி அளவில், நரசிம்மன் தனது காரில் இருந்து வில்லிவாக்கம் நாதமுனி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த நான்கு பேர் மீது நரசிம்மன் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு கார் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு உடனடியாக அனுமதித்த நிலையில், காரை ஓட்டி வந்த நரசிம்மன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயற்சித்தார்.
அப்போது அவரை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்மடி கொடுத்தனர். தொடர்ந்து வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் நரசிம்மன் மீது வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
English Summary
police case file against BJP Narasimman