#சற்றுமுன்: விசிக தொண்டர்களை வெளுத்து வாங்கிய போலீசார்! நடிகை குஷ்புக்கு என்ன ஆனது?!  - Seithipunal
Seithipunal


எம்.பி திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் அவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சிதம்பரத்தில் நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் நேற்று அனுமதி மறுத்து தடை விதித்தனர்.

இந்த நிலையில், போலீசாரின் தடையை மீறி சிதம்பரம் ஆர்ப்பாட்டத்திற்கு பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு.,வை போலீசார் கைது செய்துள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை இ.சி.ஆர் முட்டுக்காட்டில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நடிகை குஷ்பூ சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டார். இதனை அறிந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக அந்த ரிசார்ட் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த விசிக தொண்டர்கள் அங்கு வந்து பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அடித்து ஓட விட்டனர்.

மேலும் போலீசார், அங்கு அமைதியான முறையில் போராட்டம் செய்த பாஜக தொண்டர்களிடம் சமாதானம் பேசி அவர்களையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police attack vck members


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->