#சற்றுமுன்: நடிகை குஷ்பு., அதிரடி கைது!
police arrested Kushboo
சனாதன தர்மத்தின் படி இந்து மதத்தில் உள்ள அனைத்து பெண்களும் விபச்சாரிகள் என்று திருமாவளவன்பேசிய வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி, இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, எம்.பி திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் அவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சிதம்பரத்தில் நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் நேற்று அனுமதி மறுத்து தடை விதித்தனர்.
இந்நிலையில், போலீசாரின் தடையை மீறி சிதம்பரம் ஆர்ப்பாட்டத்திற்கு பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு.,வை போலீசார் கைது செய்துள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை இ.சி.ஆர் முட்டுக்காட்டில் போலீசார் கைது செய்தனர்.