திமுகவுக்கு போடும் ஓட்டு, பத்மாசுரன் கதைதான் - மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை.!
PMK Dr Ramadoss Warn about DMK Voting 31 March 2021 Edappadi Election Campaign
திமுகவிற்கு நீங்கள் வாக்களித்தால் சிவன் தலையில் கைவைக்க சென்ற பத்மாசுரன் கதைதான் என்று மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், " கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துக்கனவு திட்டத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையில், 2 5 9 திட்டங்கள் மக்களுக்கு எதிரானவை. மக்கள் புரிந்துகொண்ட செயல்பட வேண்டும்.
பாமகவின் கொள்கை ஒருசொட்டு சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே. வருடத்திற்கு 2 இலட்சம் பேர் மது அருந்தி இறக்கிறார்கள். 11 மதுபான ஆலைகளில் 7 திமுகவினர் நடத்துகிறார்கள். திமுகவினர் சாராயம் விற்பனை செய்ய குடி குடி என்கிறார்கள். இந்த இராமதாஸ் படி படி என்கிறேன். பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் படித்து பெரிய எஞ்சினியராகவும், மருத்துவராகவும் பணியாற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திமுகவிற்கு நீங்கள் வாக்களித்தால் சிவன் தலையில் கைவைக்க சென்ற பத்மாசுரன் கதைதான். சிந்தித்து செயல்படுங்கள் " என்று பேசினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
PMK Dr Ramadoss Warn about DMK Voting 31 March 2021 Edappadi Election Campaign