போலி புரட்சி பேசிவிட்டு, பெண்களை பற்றி கொச்சையான பேச்சு.. மருத்துவர் இராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


மேடைக்கு மேடை பெண் விடுதலை, பெண்ணியம் என்று போலி சமத்துவம், புரட்சி பேசும் யார் ஆ.ராசாவை கண்டித்துள்ளார்கள்? என மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கும்பகோணம் தொகுதி மூவேந்தர் முன்னேற்ற கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து சோழபுரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " 

ஆ.ராசாவை மு.க ஸ்டாலின் இன்றுவரை கண்டிக்கவில்லை. மு.க ஸ்டாலினுக்கும் பெண்களை பற்றி கவலையில்லை. பெண்மையை பற்றி கவலைப்படுவதில்லை. திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் ஆ.ராசாவை கண்டிதர்களா?. 

மேடைக்கு மேடை பெண் விடுதலை, பெண்ணியம் என்று போலி சமத்துவம், புரட்சி பேசும் யார் ஆ.ராசாவை கண்டித்துள்ளார்கள்?. தமிழகத்தில் உள்ள அத்துனை பெண்களும் திமுகவை புறக்கணிக்க வேண்டும். திமுக பெண்களுக்கு எதிரான கட்சி. ஒருபுறம் விவசாயிகள் அனைவரும் மீண்டும் விவசாயி தமிழக முதல்வராக வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Thanjavur Election Campaign about DMK Fake Feminism 4 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->