மொத்த பாமகவினருக்கும், பாமக தலைமையின் முக்கிய அறிவிப்பு!
pmk announced party meetings
மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவில், பா.ம.க. பொதுக்குழுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திண்டிவனம் தைலாபுரத்தை அடுத்த ஓமந்தூரில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவிலும், மாநகரங்களில் பகுதி அளவிலும் தனித்தனியாக பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன்படி நாளை மறுநாள் (16.06.2019) ஞாயிற்றுக்கிழமை, 18.06.2019 செவ்வாய்கிழமை ஆகிய இரு நாட்களில், வசதிப்படும் ஏதேனும் ஒரு நாளில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான பொதுக்குழுக் கூட்டங்களையும், மாநகராட்சிகளில் பகுதிகள் அளவிலான பொதுக்குழு கூட்டங்களையும் அந்தந்த நிலையிலான நிர்வாகிகள் ஏற்பாடு செய்து நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அவற்றைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான பொதுக்குழுக் கூட்டங்களை இம்மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கட்சி வளர்ச்சிப் பணிகள் & உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது ஆகியவை குறித்தும் இப்பொதுக்குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
pmk announced party meetings