எட்டாம் தேதிக்கு தயாரான அதிமுக, பாமக., பரபரப்பில் கட்சி தலைமைகள்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இந்த தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் திமுக சார்பில் கடந்த ஒன்றாம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். அதன்படி திமுக தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மக்களவைத் தேர்தலுக்கு  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், முஹம்மது ஜான் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிவித்தனர்  .

மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரன் மேட்டூர் நகரச் செயலாளராக தற்போது பதவி வகிக்கிறார், இன்னொரு வேட்பாளரான முகமது ஜான் அதிமுகவின் சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் வேலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜான் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுகவின் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாமக சார்பில் முன்னாள் மத்திய சுகதரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலைக்குள் அதிகார்வப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கலின் கால அவகாசம் வரும் திங்கட்கிழமை முடியும் நிலையில் கடைசி நாளான அன்று, அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk admk filing nomination on monday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->