கொரோனாவால் உயிரிழந்த பாமக நிர்வாகி.! அதிர்ச்சியில் பாமகவினர்.!
pmk administrator death by corona
பாமகவின் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் மு.வேலுச்சாமி இன்று கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து இருக்கின்றார்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே இருக்கும் ஆனந்தம்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமிக்கு வயது 47. இவர் ஈரோடு ஊராட்சி குழு துணைத் தலைவராக இருக்கின்றார்.
மேலும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டு மாவட்ட ஊராட்சி குழு எட்டாவது வார்டு உறுப்பினராக இருக்கின்றார். கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெருந்துறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் வேலுச்சாமி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்து இருக்கின்றார். அவரது மறைவுக்கு பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
pmk administrator death by corona