பிரதமர் மோடியை அதிர்ச்சியில் ஆழ்த்திய 6 ம் வகுப்பு மாணவன்.! வெளியான புகைப்படம்.!
pm modi wish to 6th class student
பிரதமர் மோடிக்கு ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் கடிதம் ஒன்று எழுதி, அந்தக் கடிதத்துடன் பிரதமர் மோடியை ஓவியமாக வரைந்து ஒரு புகைப்படத்தை இணைத்து அனுப்பியுள்ளார். இதனை பார்த்த பிரதமர் மோடி அந்த மாணவனை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் அஜய் டேக், இவர் பிரதமர் நரேந்திர மோடியின் ஓவியத்தை வரைந்து, ஒரு கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை பார்த்த பிரதமர் மோடி, அம்மாணவனை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் அந்த மாணவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டியுள்ளார். இது அந்த மாணவனையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடியின் அந்த பாராட்டு கடிதத்தில், "அஜயின் ஓவிய திறமையை அபாரமானது. ஓவிய கலை வெளிப்படையான கனவுகளை உணர்த்துவதாக உள்ளது. கடிதத்தில் நாட்டை பற்றிய அம் மாணவரின் கருத்துக்கள் எண்ணங்களின் அழகை வெளிப்படுத்தியுள்ளது." என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
English Summary
pm modi wish to 6th class student