குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி வந்த முக்கிய நாட்டு அதிபர்.!
pm modi welcomes brazil president
இந்திய முழுவதும் நாளை குடியரசுதின கொண்டாடப்படுகிறது இதையொட்ட நடைபெறும் விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டு அதிபர் ஜாகிர் பால்சோனரோ (Jair Bolsonaro) டெல்லி வந்தார். வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரேசில் அதிபரின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் பிரேசில் அதிபரை இந்தியாவுக்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபரின் வருகை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரை பிரேசில் அதிபரை இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
English Summary
pm modi welcomes brazil president