பாஜக.,வின் மூத்த தலைவர் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்.!
pm modi mourning to Mridula Sinha death
பாஜகவின் மூத்த தலைவர் மிருதுளா சின்ஹா நேற்று மாலை உயிர் இழந்த செய்தி அறிந்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
கோவா மாநில முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான மிருதுளா சின்ஹா நேற்று மாலை திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77 ஆகும். இவரின் மறைவுக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மிருதுளா சின்ஹா ஜனசங்கத்தில் இருந்து பாஜக.,வுக்கு வந்தவர். சிறந்த எழுத்தாளர். பாஜக.,வின் மகளிரணி தலைவராகவும் பதவி வகித்து உள்ளார். மிருதுளா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமரின் அந்த இரங்கல் செய்தியில்,
"திருமதி. மிருதுலா சின்ஹா ஜி பொது சேவையை நோக்கிய முயற்சிகளுக்காக நினைவு கூரப்படுவார். அவர் ஒரு திறமையான எழுத்தாளராகவும் இருந்தார், இலக்கிய உலகிற்கும் கலாச்சாரத்திற்கும் விரிவான பங்களிப்புகளை வழங்கினார். அவள் மறைவால் அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மிருதுளா சின்ஹாவின் மறைவுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
pm modi mourning to Mridula Sinha death