பிரதமர் மோடியிடம் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த கடிதம்! மகிழ்ச்சியில் முதலமைச்சர்!!
pm modi letter to tn cm
கடந்த 11 மற்றும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சந்திப்பிற்காக தலைநகர் சென்னை முதல் மாமல்லபுரம் வரை பலத்த பாதுகாப்பு மற்றும் சீன அதிபரை வரவேற்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இந்த ஏற்பாடுகளை எல்லாம் சிறப்பாக செய்த்தற்காக தமிழக முதலைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபர் வருகையின்போது தந்த வரவேற்பு, அன்பான உபசரிப்பு, நமது கலாசாரம், மரபை ஒரு சேர பிரதிபலித்தது.
மாமல்லபுரம் வந்தது தனக்கும், சீன அதிபருக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.. மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக மக்கள், கலாசார, சமூக, அரசியல் சீரமைப்பு மற்றும் அரசுக்கு பாராட்டுகள் என்று கடிதம் எடுத்தியுள்ளார்.