நாடு முழுவதும் 3000 மையங்கள்.! தமிழகத்தில் 166 மையங்கள்.! பிரதமர், முதல்வர் நாளை தொடங்கி வைப்பு.!
pm and cm start corona vaccine start
நாடு முழுவதும் நாளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய -மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடும் ஒத்திகை இரண்டு கட்டமாக நாடு முழுவதும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10.30 மணியளவில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு ஊசி போடும் மையத்திற்கு சென்று, இந்த தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் 3000 தடுப்பூசி மையங்களிலும், தமிழகத்தில் 166 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதாரப் பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள்.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படது.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிகள் அனைத்தும் இலவசமாக போடப்படுகிறது.
இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டு சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு, அவர்கள் கண்காணிக்க படுவார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பின்பே, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் தற்போது வரை நான்கு லட்சத்தி 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் இரண்டு முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப்படும்.
English Summary
pm and cm start corona vaccine start