திடீர் பரபரப்பு.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி, நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக சசிகலா அவ்வப்போது அதிமுக தொண்டர்கள் இடையே உரையாற்றி வருவதாக பல ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

சசிகலாவிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து, வின்சென்ட் ராஜா என்பவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சசிகலாவிடம் பேசினால் அதிமுகவினர் நீக்கப்படுவார்கள் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிமுக தலைமையின் எச்சரிக்கையை மீறி பேசியதால், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இருந்த வின்செண்ட் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், வின்செண்ட் ராஜா நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்திற்கும் சம்பவத்திற்கும் உண்டா.? இல்லையா.? ஏதாவது பிரச்சினையினால் பெட்ரோல் குண்டு விசப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol bomb blast on ex admk member


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->