பெரியாரின் சொந்த பேரன் பாஜகவில் இணைந்தார்.! வெளியிட்ட பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பச்சையப்பா தெருவை சேர்ந்த சதீஷ் கிருஷ்ணா (வயது 34) என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகின்றனர். 

நேற்று, இவர் கும்பகோணம் நகர பாஜக தலைவர் ரங்கராஜன் மற்றும் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் ஆகியோரின் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில்  இணைந்துள்ளார். 

இதுகுறித்து, சதீஷ் கிகிருஷ்ணன் தன்னுடைய கொள்ளு பாட்டியும் பெரியாரின் அம்மாவும் சகோதரிகள் என்றும், தன்னுடைய தாய் ஈரோட்டில் பிறந்தவர் என்றும், தந்தை முத்துகிருஷ்ணன் திருவாரூர் கொரடாச்சேரி சேர்ந்தவர் என்றும், அவர் ரைஸ்மில் நடத்தி வந்ததாகவும் கூறினார். 

மேலும், பெரியார் தங்களது வீட்டிற்கு வந்து உள்ளதாகவும், தெரிவித்தார். தொடர்ந்து அவர், "நாங்கள் கும்பகோணம் வந்து விட்டோம். 2018ல் அதிமுகவில் பணியாற்றினேன். தற்பொழுது எனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடித்துள்ளதால், நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periyar grandson join on bjp


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->