அலட்சியமாக ஸ்கூட்டியில் 6 பேர் பயணம்... 5 பேர் விபத்தில் பலியான சோகம்.! குடும்பத்தினர் கண்ணீர்.!
Perambalur Veppur Accident 5 Persons Death Police Investigation 28 Feb 2021
இருசக்கர வாகனத்தில் 6 பேர் சென்று கார் மீது மோதிய நிலையில், இந்த கோர விபத்தில் 5 பேர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தை சார்ந்தவர் செந்தில். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் செந்நிலவன் (வயது 3), தமிழ்நிலா (வயது 2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது உறவினரின் குழந்தை நந்திதா (வயது 2).
நந்திதாவின் தாயார் தனம். தனத்தின் சகோதரர் சக்திவேல். இவர்கள் ஆறு பெரும் இன்று அங்குள்ள கொழப்பாடியில் இருந்து வேப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். இதன்போது, அங்குள்ள களங்காடு பகுதியருகே வருகையில், எதிர்திசையில் வந்த காரின் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டு சுக்கு நூறாக உடைந்தது. விபத்தில் பரமேஸ்வரி, செந்நிலவன், நந்திதா ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தனம், சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். குழந்தை தமிழ் நிலா மட்டும் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த குன்னம் காவல் துறையினர், அனைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், கார் ஓட்டுநர் சரவணன் என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Perambalur Veppur Accident 5 Persons Death Police Investigation 28 Feb 2021