இந்து கோவிலை கொளுத்துவேன், தலையை வெட்டுவேன்.! பெரம்பலூர் முஹம்மது ஷான் மிரட்டல்.!
perambalore islam man fire hindu temple
பெரம்பலூர் அருகே இந்து கோவிலுக்கு சொந்தமான இரு தேர்களை, இஸ்லாமிய நபர் ஒருவர் அத்துமீறி கொளுத்தியது மட்டுமில்லாமல், தலையை வெட்டுவேன், மீண்டும் கொளுத்துவேன் என்று பேசி இருக்கும் காணொளி வைரல் ஆகிவருகிறது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தில் இன்று காலை சுமார் 7 மணி அளவில், வாலிகண்டபுரம் கிராமத்தைச் சார்ந்த காதர் ஷான் என்பவரின் மகன் முஹம்மது ஷான் என்பவர் நுழைந்துள்ளார்.
பின்னர் இசுலாமிய மசூதிக்கு அருகில், இந்து கோவிலுக்கு சொந்தமான கிடங்கில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரண்டு தேர்களை முஹம்மது ஷான் தீ வைத்து கொளுத்தியுள்ளான். இதனை பார்த்த அந்த மக்கள் அவனை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவன் தெரிவிக்கையில், "கடந்த சில வருடங்களாக இந்த தேர்கள் பூட்டி கிடைப்பதால், இதன் உள்ளே என்ன இருக்கு என்று பார்க்கவும், கோர்ட் ஆர்டர் கொடுத்தும் ஏன் தேர் ஓடவில்லை என்றும், நான் அந்த தேரை தீயிட்டு கொழுத்த வந்தேன் என்று ஒப்புக்கொண்டான்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள இந்து கோவிலில் உள்ளே திடீரென தீவிபத்து ஏற்பட்டு சாமி பொருட்கள் வைக்கும் மண்டபம் தீப்பற்றி எரிந்தன. எப்படி தீ பற்றி எரிந்து என்று பொதுமக்கள் நினைத்திருந்த நிலையில், அந்த மண்டபத்தையும் நான் கொளுத்தினேன். இப்போது என்னை விட்டாலும் கொளுத்துவேன். தலையை கூட வெட்டுவேன் என்று முஹம்மது ஷான் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து, பொதுமக்கள் முஹம்மது ஷானை பிடித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
perambalore islam man fire hindu temple