பாஜகவின் தேர்தல் வியூகம்.! மிகப்பெரிய மோசடி அறிவிப்பு வெளியீடு.!! அதிரடியாக கருத்து தெரிவித்த ப.சிதம்பரம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய மந்திரியான பியுஷ் கோயல்., இரயில்வே துறையில் வரும் ஆறு மாத காலத்தில் சுமார் 1 இலட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும்., அதே போன்று வரும் இரண்டு வருடத்திற்குள் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இரயில்வே பணியானது தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 

இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது., 


இரயில்வே துறையில் கடந்த 5 வருடங்களில் சுமார் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 976 பதிவுகள் காலியாகவே உள்ளன. இந்த நிலையில்., காலியான பணியிடங்களை நிரப்பப்போவதாக அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பானது பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரிய மோசடி அறிவிப்பாகும். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்கள் இன்னும் காலியாகவே இருக்கிறது., அந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படாமல் பல கோடிக்கணக்கான இளைஞர்கள் இன்னும் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p.chithamparam talks about bjp govt jobs announcement in railway


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->