குழப்பத்தை ஏற்படுத்தி ரஜினிக்கு ப.சிதம்பரம் கேள்வி..! பதில் கூறுவாரா? ரஜினி..!
P.CHIDAMBRAM SAYS ABOUT RAJINI
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற கமல்ஹாசன் 60 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அற்புதம், அதிசயங்கள் நிகழும். அதிசயத்தையும், அற்புதத்தையும் பொதுமக்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரஜினி கூறிய இந்த இரண்டு வார்த்தைகள் மிகப்பெரிய அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியினர் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் இதுகுறித்து விமர்சித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த, நிலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமினில் தற்பொழுது வெளி வந்தார். அவர் ரஜினியின் அதிசயம், அற்புதம் குறித்து தெரிவித்துள்ள கருத்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
'2021ல் என்ன அதிசயம், என்ன அற்புதம், நிகழும் என்பதை ரஜினி தான் கூறவேண்டும்' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சிதம்பரம் அவர்களை வேட்டி கட்டிய ஒருவர் தான் பிரதமராக வரவேண்டும் என்று ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
P.CHIDAMBRAM SAYS ABOUT RAJINI