எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்..!! திருவாரூரில் மாஜி அமைச்சர் அட்டாக்..!!
Panrutti Ramachandran was treacherous to MGR Jayalalitha
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தை அடுத்த மன்னார்குடியில் நகர அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய காமராஜ் தற்பொழுது ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் "தற்பொழுது பன்னீர்செல்வத்துக்கு ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து விட்டு அம்மையார் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அவருக்கு துரோகம் செய்து வெளியேறினார். பிறகு பாமகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினரானார். பின்னர் அதில் இருந்து விலகி தேமுகாவிற்கு சென்று அங்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அப்பொழுதெல்லாம் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இவருக்கு தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தற்பொழுது எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை காப்பாற்றுவதற்காக ஓபிஎஸ் உடன் ஒன்று சேர்ந்துள்ளோம் என சொல்கிறார். ஓபிஎஸ் அணியை கவிழ்பதற்கு இவர் ஒருவரே போதும்" என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Panrutti Ramachandran was treacherous to MGR Jayalalitha