ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு எப்போது ஆஜராவேன் என பன்னீர்செல்வம் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக விசாரிக்க, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த விசாரணை ஆணையம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர்,  உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ  மருத்துவர்கள்  உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சசிகலா தவிர, மற்ற அனைவரிடமும் விசாரணை முடிந்துள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வம் ஆஜராக, ஆணையம் சம்மன் அனுப்பியது ஆனால் இதுவரை துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆஜராகாமல் இருந்தநிலையில் இது குறித்து சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எப்போது ஆறுமுக ஆணையம் நடத்தும் விசாரணையில்  ஆஜராக போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

திமுக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர்  பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராவேன் என தெரிவித்த அவர் ஆணையத்தில் ஆஜராகும்போது எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வேன்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panneerselvam talk about jayalalitha


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->