வாயை கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்.! வச்சி செய்த அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதலீட்டை பெற்றுக் கொடுத்தால், அவருக்கு பாராட்டு விழா எடுப்பதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இது குறித்து விமர்சித்த அமைச்சர் பாண்டியராஜன் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு விழாக்களை முதல்வருக்கு எடுக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரத்தில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவானது, அந்த சங்கத்தின் மறைந்த முன்னாள் தலைவரான சுகுமார் அவர்களின் சிலை திறப்பு விழா ஆகும்.

pandiyarajan, seithipunal

இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நான் அறிந்த வரையிலும் 16 பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கின்றது.

மேலும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு 4 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் வரும். திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு விழாக்களை முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு எடுக்கவேண்டி இருக்கும்." என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pandiyarajan minister says about stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->