தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில் திடீர் திருப்பம்.! முக்கிய புள்ளியை அதிரடியாக கைது செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில், பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. 58 வயதாகும் இவர் பல்லடம் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்த நிகழ்வைக் கண்டிக்கும் விதமாக, பாஜக சார்பில் பல்லடம் பேருந்து நிலையம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின்போது தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாக்குவாதம் முற்றவே பாஜகவை சேர்ந்தவர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்று மாலை பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமாரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே நேற்று பாஜகவின் இளைஞர் அணி நிர்வாகி ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PALLADAM BJP RAJKUMAR ARREST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->