உங்க பரிசே வேண்டாம்.! அதிக காளைகளை பிடித்த முரட்டுக்காளை பிரபாகரன் ஆவேசம்.!
PALAMEDU JALLIKATTU 1
மதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்க மறுத்த காளைகளை நம் முரட்டுகளைகள் அடக்கி பரிசுகளை வென்றனர். முரட்டுகளைகளையும் முட்டி தள்ளிவிட்டு, வளர்த்தவருக்கு பெருமையையும் பல காளைகள் பெற்று தந்தன.
இந்த ஆண்டு அவர் 18 மாடுகள் பிடித்து முதலிடம் பிடித்தவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த மதுரை மாவட்டம் பொதும்பை சேர்ந்த பிரபாகரன் (24) 17 மாடுகளை பிடித்தார். இவருக்கு ஒரு பவுன் தங்க காசு வழங்க விழா கமிட்டி முடிவு செய்து இருந்தது.
ஆனால், பிரபாகரன் தானும் 18 மாடுகள் பிடித்தாகவும், விழா கமிட்டியினர் இந்த ஆண்டும் எனக்கு கார் பரிசு சென்று விடக்கூடாது என்பதற்காக தேர்வில் முறைகேடு செய்துள்ளதாக கூறி பரிசை புறக்கணித்து சென்றார்.
பிரபாகரனுக்கு வழங்க வேண்டிய ஒரு பவுன் தங்க காசு விழா கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பிரபாகரன் முதலிடம் பெற்று காரை பரிசாக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.