எங்க நிலத்தை மாமன்னர் பிடிங்கிக்கொண்டார்., 'அட்டகத்தி' பி ரஞ்சித் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
p ranjith case in high court
மாமன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த பி ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின், இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
காதலிக்கும் பொண்ணு நம்மள விட்டு போக கூடாதுன்னா., முதல்ல 'மேட்டர முடி' என்று தமிழ் சமூகத்துக்கு தவறான பாதையை காட்டிய இயக்குநர் 'அட்டகத்தி' பா.ரஞ்சித், கடந்த 2019 ஆம் ஆண்டு மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வன்மத்தை கக்கி, தமிழக மக்களின் கண்டனத்துக்கு ஆளானார்.
"மாமன்னர் ராஜராஜசோழன் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்த நிலத்தை அபகரித்தார்." என்று அவர் கூறியது தமிழக மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. 'வரலாறு தெரியாத சாதி வன்மம் பிடித்த பா ரஞ்சித்'துக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். வரலாற்று ஆய்வாளர்களும் பா ரஞ்சித்துக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.
மாமன்னர் ராஜராஜ சோழன் மீது வீண் பழி சுமத்திய இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே பா ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, "பா ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து" உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், "ஒருவர் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது" என்று நீதிபதி இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பா ரஞ்சித் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி தொடுத்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
p ranjith case in high court