அதிமுக தோல்வி அடைய இதுதான் காரணம்.. வெளியான பரபரப்பு தகவல்.!!
p chidambaram says about admk lost
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்று செம்மையான ஆட்சியை, திறமையான நிர்வாகத்தை தர எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசின் அதிகார பலம், பண பலம், பாரதப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து தொடர்ந்து கொடுத்து வந்த உக்கிரமான போர் என எல்லாவற்றையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியைபெற்ற மம்தா பானர்ஜி, அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அசாம் காங்கிரசில் மூத்த தலைவர்கள் இல்லாவிட்டாலும், இரண்டாவது தலைமுறையினர் சிறப்பாக பணியாற்றி பெரும் சவால்களுக்கு இடையே நல்ல இடங்களை கைப்பற்றி உள்ளனர்.
கேரளாவில் காங்கிரஸ் பெரிய தோல்வியை போல சித்தரிக்கப்படுகிறது. தோல்வியை மறைக்க மறுக்கவில்லை. ஆனால் வாக்கு வித்தியாசம் 0.8 சதவீதமே. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேர்தல் செயல்பாடுகளில் குறைவாகவோ, எதிராக செயல்படுபவர்களை கண்டறிந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி பாஜகவின் சீடராக மாறி விட்டார். அதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது. விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் போராட்டத்தை முடிக்க மாட்டார்கள். பொல்லாத வேளாண் சட்டங்களை விலக்கிக்கொண்டு, விவசாயிகள், எதிர்கட்சிகளை கலந்து ஆலோசித்து விவசாயிகளுக்கு தேவையான புதிய சட்டம் கொண்டு வந்தால், அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
p chidambaram says about admk lost