அதிரடியாக களமிறங்கிய ப.சிதம்பரம்.. ஆட்டம் கண்ட அழகிரி..!
p chidambaram new role in congress party
ப.சிதம்பரம் தற்போது மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் . முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ஜெயிலுக்கு போய் விட்டு வந்தது முதல் அவரது அரசியல் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் நிலவியிருக்கிறது. மேலும், இது நாள் வரையிலும் தேசிய அரசியலில் மட்டும் கவனமாக இருந்தவர், தற்போது மாநில அரசியலிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
இதற்கு முன், சத்தியமூர்த்தி பவன் பக்கமே செல்லாதவர் தற்போது தொடர்ந்து இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக, சென்னையில் நடக்கும் பேரணி, கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார்கள்.
மேலும், அவர் தேசிய அரசியலை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வெகு விரைவில் கே.எஸ்.அழகிரியின் ஆட்டம் க்ளோஸ் ஆகலாம் என்று பேசிக்கொள்கிறார்கள். இதனால், தங்களது பதவிகள் பறிபோகலாம் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
English Summary
p chidambaram new role in congress party