ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி மறைவு.. நேரில் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆறுதல்.!!
ops wife death tribute to cm stalin
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் சற்றுமுன் காலமானார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, குடும்பத்தினர் அவரை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று காலை சட்டப்பேரவை நடைபெற விருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் அங்கு வந்திருந்தனர். இந்த தகவலை அறிந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு உட்பட திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் சென்று ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார்.
English Summary
ops wife death tribute to cm stalin