செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ்ஸுக்கு இன்ப அதிர்ச்சி.! ஆதரவாளர்கள் உற்சாகம்.!
ops supporters grand respect to p.panneerselvam
இன்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்க அவருடைய ஆதரவாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து கலக்கி இருக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் இருக்கின்றது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் சட்டமன்ற பேரவை தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அத்துடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
இந்த நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இந்த செயற்குழு கூட்டத்திற்கு வரவேற்க அவருடைய ஆதரவாளர்கள் பலவேறு ஏற்பாடுகளை செய்து அசத்தியுள்ளார்.
மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள பதாகையில் 'ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே' என்று கூறப்பட்டுள்ளது. துணை முதல்வரின் முகமூடி அணிந்து வந்த அவருடைய ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலை அணிவித்து, கையில் வாள் கொடுத்து மிகவும் உற்சாக வரவேற்பு அளித்து இருக்கின்றனர்.
English Summary
ops supporters grand respect to p.panneerselvam