கிராமங்கள் தோறும் இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள்., மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேச்சு!!
ops son speech in parliament
தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகனான ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் எம்.பி-யாக ரவீந்திரநாத் பதவியேற்றுக்கொண்டர். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, நாட்டின் மிகப்பெரிய சவாலாக வேலைவாய்ப்பின்மை உள்ளது என பேசிய ரவீந்திரநாத் குமார். தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
இதனையடுத்து, நேற்று பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது பேசிய ரவீந்திரநாத் குமார் கிராமங்கள் தோறும் குறைந்த விலை மருந்தகங்களை மத்திய அரசு திறக்க வேண்டும் என தெரிவித்தார்.
English Summary
ops son speech in parliament