தேர்தல் முடிவிற்கு முன்னதாகவே எம்.பியான ஓ.பி.எஸ் மகன்.!!
ops son name noted by MP in temple festival notice
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னதாகவே துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் எம்.பி ஆகிவிட்டார். எப்படி என்று பார்த்தால் தேனி மாவட்டம் குச்சனுரில் காசி அன்னபூரணி ஆலயத்திற்கு பேருதவி புரிந்ததாக, கடந்த 16ஆம் தேதி ஓ. பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் குமார் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.
அதில் ரவீந்திரநாத் குமார் பெயர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்பே ரவீந்திரநாத் குமார் பாராளுமன்ற உறுப்பினரானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
ops son name noted by MP in temple festival notice