அந்த ஆடியோ வெளியானால் அதிமுக என்ற கட்சியே இருக்காது - அதிரவைக்கும் ஓபிஎஸ் தரப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

இருந்த போதிலும் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே ஓபிஎஸ்-இபிஎஸ் விவகாரம் உச்சத்தில் இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் பொன்னையன் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்று வெளியானது. ஓபிஎஸ் ஆதரவாளரான நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக வெளியான அந்த ஆடியோ, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ குறித்து பொன்னையன், இந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது. அந்த ஆடியோவில் உள்ளது என் குரல் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தின் பிரபல செய்தி ஊடகத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன், பொன்னையன் குறித்த முழு ஆடியோவையும் வெளியிட்டால் என்ன நடக்கும் என்றே தெரியாது. அவர் அவ்வளவு பேசியிருக்கிறார். நாங்கள் மூன்று நிமிட ஆடியோவை கட் செய்து விட்டு தான் வெளியிட்டு இருந்தோம். முழு ஆடியோவையும் வெளியிட்டால் அதிமுக என்ற கட்சியே இருக்காது" என்று மிரட்டும் வகையில் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops side say again ponnaiyan audio issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->