தர்மத்தின் அடிப்படையில்., சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். போட்டியின்றி தேர்நதெடுக்கப்பட்டுள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்ன என்றும் மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் இடம், அதிமுக தேர்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை கட்சி எப்படி எதிர்கொள்ளும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த ஓபிஎஸ்,

"பொதுவாக நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பவன் நான். அதிமுக உள்ளாட்சி தேர்தல் தர்மத்தின் அடிப்படையில் நேர்மையாக நடந்து முடிந்து உள்ளது" என்று ஓபிஎஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS SAY ABOUT ADMK ELECTION CASE IN CHENNAI HC


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->