ஓபிஎஸ்ஸை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு.! செய்தியாளர்களிடம் கூறிய வார்த்தை.!
ops sad about arun jetley death
கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அருண் ஜெட்லி உயிரிழந்தார்.
தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அருண்ஜெட்லீயின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி சென்றார். அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோரும் அவருடன் சென்றனர்.
டெல்லியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.
அதில், "அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அவர் சேவையாற்றியவர். அதிமுக சார்பில் அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
ops sad about arun jetley death