அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும்.! மனம் உருகிய ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையில் எம் .ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது மயக்கநிலையில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவர் அவ்வப் போது கண்விழித்து பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக தங்களது சமூக வலை பக்கங்களில்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம்பெற தமிழக துணை முதலமைச்சர் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், சகோத‌ர‌ர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னேர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops pray for spb


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->