சோகத்திலும், வேதனையிலும் ஓபிஎஸ்.. அவரே வெளியிட்ட செய்தி.!!
ops mourning for cuddalore admk member
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி, புதுபிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வி.பாலகிருஷ்ணன். இவர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது அவரது மறைவிற்கு ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி, புதுபிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த கழக மேலவை பிரதிநிதியும், எனது சோதனை காலங்களில் உடனிருந்தவரும், என்னுடைய தீவிர ஆதரவாளருமான அன்புச் சகோதரர் திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்கள், நேற்று (23.6.2022) அஇஅதிமு கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த அநாகரிகச் செயல்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த திரு.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
ops mourning for cuddalore admk member