டெல்லி விரைந்த ஓ.பி.எஸ் !! வெளியானது பயணத்தின் பின்னணி !!
ops in delhi
பாராளுமன்றம் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நாட்டின் 2வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் மோடி தலைமைலான அரசு பொறுப்பேற்று முதல் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது அதில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்தார் அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரியை சந்தித்து பேசியிருந்த நிலையில்
இந்தநிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாநில நிதியமைச்சகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது, தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். கூட்டம் முடிந்த பின்பு துணை முதல்வர் பன்னீர்செல்வம் முக்கிய மத்திய அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.