ஓபிஎஸ்., இபிஎஸ்., அடுத்தடுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று இந்திய இராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ராணுவ வீரர்களின் வீர தீரங்களை பெருமைமிகு ராணுவ தினத்தில் நினைவுகூர்ந்து உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தாய் தேசம் காக்க உறவுகளைப் பிரிந்து வெயில், பனி பாராமல் குருதி சிந்தி தம் இன்னுயிரை இழக்க துணியும் ராணுவ வீரர்களின் வீர தீரங்களை பெருமைமிகு ராணுவ தினத்தில் சிரம் தாழ்ந்து நினைவுகூர்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்தியன் இராணுவ நாளான இன்று, தாய்த்திருநாட்டினைக் காக்க அனுதினமும் போராடும் இந்திய இராணுவத்தினரின் வீர, தீர தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றி, தாயகம் காக்க தன்னலமின்றி, தங்கள் இன்னுயிரையும் இழக்கத் துணிந்து எந்நாளும் உழைக்கும் நமது இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS EPS Tweet about Indian army day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->