இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வெளியிட்ட தகவல்.. உற்சாகத்தில் அதிமுகவினர்.!!
ops eps thanks for admk members
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தமிழக மக்களின் பேரன்பை பெற்ற ஒப்பற்ற அரசியல் இயக்கம் ஆகிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்திலும், தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டிய கடமைகளை பற்றியும் மக்களுக்கு இன்னும் என்னவெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து கலந்துரையாடி நாம் கடமைகளை திட்டமிட தலைமை கழகத்தில் நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் கூட்டங்கள் மிக சிறப்பாகவும், பயனுடையதாகவும் அமைந்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், மன நிறைவோடு சென்றதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களிடமும், புரட்சித்தலைவி அம்மா அவர்களிடமும் இருந்து அரசியல் பாடம் பயின்ற நாம் அனைவருக்கும் கழகத்தின் உயர்வுக்காகவும், வெற்றிக்காகவும் முழுவீச்சுடன் பணியாற்ற உறுதிபூண்டு இருப்பதை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு இடமும் காணமுடிந்தது.
எண்கள் அழைப்பை ஏற்று மாவட்ட ரீதியாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலிலும் கழக முழுமையாக வெற்றியை ஈட்டுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும், அனைவரும் ஒன்றிணைந்து முழுவீச்சுடன் மேற்கொண்டு வெற்றி கனியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் பொற்பாதங்களை சமர்பிப்போம் என்று நீங்கள் அனைவரும் உறுதி அளித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
ops eps thanks for admk members