#BigBreaking: அனைவரும் ஒன்றிணைந்து., ஓபிஎஸ், இபிஎஸ்., அதிரடி.!  - Seithipunal
Seithipunal


அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பேசியுள்ளார் 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றுவருகிறது.

அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்த 8,240 பேருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறுகிறது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், "வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு., தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே நம் இலக்கு. அதனை நோக்கி செல்ல வேண்டும்" என்று ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி பேசுகையில், "கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை ஒருமித்த கருத்தோடு ஆதரித்து முழுமனதோடு வெற்றி பெற செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும்." என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பேசியுள்ளார் 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps say election plan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->