ஓபிஎஸ், இபிஎஸ் போட்ட உத்தரவு... தயாரான அதிமுகவினர்.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தபோதிலும் தண்ணீர் பிரச்சனை தீரவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். 

இது குறித்து அனைத்து மாவட்ட அதிமுக செயலாளர்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் மழை வேண்டி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் அதிமுகவினர் யாகம் நடத்தவும் மற்றும் பூஜை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps new order for admk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->