ஓபிஎஸ்யை சோகத்தில் ஆழ்த்திய செய்தி! கண்ணீர் கடலில் மூழ்கிய உறவினர்கள்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் கார் ஓட்டுனராக பாஸ்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணி துறை ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கார் ஓட்டுநர் பாஸ்கருக்கு நிவேதா என்ற மகள் இருந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிவேதா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் . கார் ஓட்டுனரின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் நிவேதாவின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops car diver daughter death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->