தேர்தலுக்காக மும்முரமாக களமிறங்கும் அதிமுக.! இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிரடி.! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது அதிமுக.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முதல்வரும்,இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் எம்பி, இரா. கோபாலகிருஷ்ணன், தேர்தல் பிரசாரக் குழுவில் எம்.எல்.ஏ., கி.மாணிக்கம் இன்று முதல் உறுப்பினர்களாக இணைந்து செயல்படுவார்கள்.

கட்சித் தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops and EPs new announcement about election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->