உள்ளாட்சி தேர்தல் நேரத்தில், அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்த இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்!
ops and eps new announcement
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக உள்ளாட்சி தேர்தல் பணிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்வது என பல்வேறு பணியை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக கட்சி தலைமை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ள இக்கூட்டத்திற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
English Summary
ops and eps new announcement