ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் அதிரடியான இறுதி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்.!
ops and 11 mla case fianl judgement
அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, தற்பொழுது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பின்போது, ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கானது தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என நீதிமன்றம் உத்தரவிட, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆனது தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையை விரைவில் நடத்த வேண்டும் என மேல்முறையீடு செய்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அவரது முறையீட்டடை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புவதாக உச்சநீதிமன்றம் கருத்து.
இதையடுத்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க செய்யும் வழக்கை முடித்து வைத்து இறுதி தீர்ப்பை வழங்கினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
English Summary
ops and 11 mla case fianl judgement