நமது அடுத்த இலக்கு இதுதான்., ஓபிஎஸ் தொண்டர்களுக்கு அழைப்பு! - Seithipunal
Seithipunal


நமது அடுத்த இலக்கு 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற ஒரு இலக்கோடு களப்பணி ஆற்ற வேண்டும் என அதிமுகவின் தொண்டர்களுக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழிக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்சியின்  உயர் மட்டத்தில் உள்ள பொருப்பாளர்களான நான் உட்பட யாருக்கும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக நாம் அனைவரும் ஒன்றாக கட்சிக்கு விசுவாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியது போல் அதிமுக தொடர்ந்து பல நூறு ஆண்டுகள் இருக்கும். எனவே கட்சி பொறுப்பில் உள்ள அனைவரின் எண்ணமும் தூய்மையாக இருக்க வேண்டும். நமது அடுத்த இலக்கு 2021ல் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். இந்த  ஒரே இலக்கோடு களப்பணி ஆற்ற வேண்டும்” என அந்த ஆலோசானை கூட்டத்தில் ஓபிஎஸ் உரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops admk meeting speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->