மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்..கொரோனா தொற்றா? முடிவுகள் வெளியானது..! - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பி.எஸ் திடீரென அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா அறிகுறி காரணமா? அல்லது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதா? என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. 

இதனையடுத்து, அவர் வழக்கமான செய்யப்படும் உடல் பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை முடிந்தவுடன் இன்று மதியம் அல்லது மாலை இல்லம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார். இதேபோல கடந்த 25 ஆம் தேதியும் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அன்றைக்கே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops admitted in chennai private hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->