துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு குடலிறக்கம் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் அப்போது அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடியாத நிலை இருந்தது. தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் எம்ஜிஎம் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு குடலிறக்க சிகிச்சை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை அவர் மருத்துவமனையில் இருந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துமனையில் நேற்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இம்மருத்துவமனையில் ஏற்கனவே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறுவை சிகிச்சை மேற் கொண்டிருந்தார். அதன் காரணமாக நடைபெறும் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மட்டுமே துணை முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops admitted admitted to hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->